Wednesday, May 26, 2010

இந்த பாதை எங்கு போகும்?

கண்ணை மூடிக்கொண்டு பாதை இருட்டாக உள்ளது என்று கூறுமளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.
இருட்டாய் இருக்கும் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு ,உண்மையை உணர மறுக்கும் ஒரு பெரிய முட்டாள் .
காதலை சொல்லாமல் ,தாடியும் வளர்க்காமல் இயல்பாக இயங்க எனக்கும் ஆசை தான்
வழக்கம் போல் வாழ வாழ்க்கை இல்லையே, நீ இல்லாததால்
எழுதிய கவிதைகள் குப்பையாய் தோன்றிட
எழுதும் கவிதைகளை என்னவென்று கூற
காதலில் வலிகள் உண்டு என்று சொன்னிர்களே
வலிகள் மட்டும் தான் காதல் என்று ஏன் சொல்லவில்லை ?