Monday, December 20, 2010

சொல்ல போவதில்லை என் காதலை

சொல்லி தான் புரியவைக்க வேண்டுமா என்ன

இந்த காதல் என்ற உன்னத உணர்வை

சொல்லாத காதல் கூட ஒரு விதமான சுகமான வலியே

Thursday, November 25, 2010

உன்னோடு உன் நினைவுகளும் தொலைந்திருந்தால்
கனவென்ற பெயரில் என் தூக்கம் எரிந்திருக்காது
கவிதை என்ற  பெயரில் இவைகளும் முளைத்திருக்காது

Wednesday, September 1, 2010

Dejavu

முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தையின் ஏக்கத்தை போன்றாரு தாக்கத்தை தந்தது
பாதியிலே முடிந்து ஒழிந்த அவளை பற்றிய கனவு !!!!

Monday, July 19, 2010

என்னவளே..

கண்டதுடன் வந்த காதல்கள் எல்லாம்
காலபோக்கில் மறைந்து போக,இன்று
கனவினில் மட்டுமே காணும் உன்னை
மறக்க மறுப்பது ஏனோ ?

நித்திரையில் பூக்கும் பூவாக
கனவில் உன் பிம்பங்கள்
உறக்கத்தை எரிக்கும் தீயாக
நெஞ்சத்தில் உன் எண்ணங்கள்

இனி இது தான் காதல் என்று சொல்லவதை விட
இவள் தான் என் காதல் என்றே சொல்லுவேன் .

Wednesday, May 26, 2010

இந்த பாதை எங்கு போகும்?

கண்ணை மூடிக்கொண்டு பாதை இருட்டாக உள்ளது என்று கூறுமளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.
இருட்டாய் இருக்கும் பாதையில் கண்ணை மூடிக்கொண்டு ,உண்மையை உணர மறுக்கும் ஒரு பெரிய முட்டாள் .
காதலை சொல்லாமல் ,தாடியும் வளர்க்காமல் இயல்பாக இயங்க எனக்கும் ஆசை தான்
வழக்கம் போல் வாழ வாழ்க்கை இல்லையே, நீ இல்லாததால்
எழுதிய கவிதைகள் குப்பையாய் தோன்றிட
எழுதும் கவிதைகளை என்னவென்று கூற
காதலில் வலிகள் உண்டு என்று சொன்னிர்களே
வலிகள் மட்டும் தான் காதல் என்று ஏன் சொல்லவில்லை ?