Thursday, September 18, 2008

நீயா ?? நானா??

யானைக்கும் அடிசறுக்கவது போல ,

ஞானிக்கும் ஞாபகமறதி வருவது போல

எனக்கும் சின்ன பித்து பிடித்து விட்டதா ???

"உன்னை விட ஒரு அழகான கவிதை எழுத ,

இந்த இரவை எரித்து கொண்டு இருக்கிறேனே ;)

Monday, September 8, 2008

கல்லூரி நாட்கள் -"my happy days"

வீட்டையே மறக்க செய்தது நான் தங்கிய விடுதி ...
அவ்வப்போது நினைக்க செய்தது விடுதியில் நான் அருந்திய உணவு ....
8:40 மணிக்கு தொடங்கும் முதல் வகுப்பு வகுப்பறையில் .....
8:30 க்கு பக்கேட்கலின் அணிவகுப்பு இடம் பிடிக்க குளியலறையில் ....
என் வகுப்பறை ஒரு பூஞ்சோலை....
அங்கு கன்னுமிடமெல்லாம் நட்பென்ற பூ பூத்து குலுங்கும்..... பூன்சோலையினால் என்னவோ தெரியவில்லை ..
நானும் என் நண்பர்களும் வகுப்பறையிலே உறங்கி போய்விடதுண்டு....
தேர்வறையிலும் தேவதைகளை தேடியதால்,குறைந்தது என் மதிப்"பெண்கள்":)

திரும்பி கிடைக்குமா ???
இரவில் நாங்களே சமைத்து சாப்பிட்ட மேக்கி நூடுல்ஸ் ....
திரும்பி கிடைக்குமா???
மழையிலும் நனைந்து கொண்டே குடித்த பவா கடை தேநிர்...
திரும்பி கிடைக்குமா??
விடுதியே கலவரமாக்கும் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் ...

என் கேள்வி பட்டியல் மிகவும் பெரிது ....
அதற்கான பதிலோ ஒரு வார்த்தை தான் ...

சிறந்த ஒரு கவிதையின் வரி போல ஆழமானது ...
நாம் கல்லூரியில் சந்தித்த சுகமான வலிகள் .....

இறைவனிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி

திரும்ப கிடைக்குமா ???
என் கல்லூரி நாட்கள் ....







Thursday, September 4, 2008

rain n pain

மழை வந்தது எதனால் ??

புயல் கடல் கடந்ததாலா....

பெண்ணே நீ என்னை கடந்ததாலா...


மின்னல் தாக்கி மின்னல் இறக்க கூடும்...

மழையில் வெளியில் நடக்காதே ......


மழை சாரல்லும் மண் வாசமும் போல ...
என் இமையை விட்டு மறையாதே