Saturday, December 13, 2008

Evolution

நீ காதலை மறைத்தாய் என்று நினைத்து என்னுள் இருந்த கவிஞனை தேடி பிடித்தேன் ...

நீ காதலை மறந்தாய் என்று எண்ணி கவிதை எழுதுவதை குறைத்தேன் ...

நீ காதலை மறுத்தாய் என்று அறிந்ததும் கண்டு எடுத்த இடத்திலயே கவிஞனை மீண்டும் தொலைத்தேன் ...

நிழற்படம்

உன் நிழலை துரத்திய நாட்களை நினைக்க செய்கின்றது உன் நிழற்படம்..

உவமையே இல்லாத கவிதை போல ஊமையாக இருக்கிறது உன் நிழற்படம் ...

கல்லில் உயிர் உள்ள கடவுளை பார்க்க கற்றேன் அன்று..இந்த காகிதத்துடன் ( நிழற்படம் )வாழ கற்கிறேன் இன்று...:(