Saturday, July 25, 2009
COLLEGE TO CORPORATE
உரங்கியே கடந்தது நான்காண்டு
அழகிய நிலவது
தேய்ந்தே கரைந்தது நான்காண்டு
பின்பு விழித்து எழுந்தேன்
இனி தான் வாழ்க்கை என்று
இன்று வியர்த்து உழைக்கிறேன்
இது தான் வாழ்க்கை என்று
Tuesday, July 14, 2009
PRELAB-VIVA-DEMO
a close observation of a typical engineering student
விடுதிக்கு புதுசு
" ஒடம்ப பார்த்துக்கோ ,நல்ல சாப்பிடு ,அடிக்கடி போன் பண்ணு " இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே விக்ரமன் படமா ஓடிகொண்டுருக்க ,முதல் மாடியில் இருக்கும் தான் அறையை நோக்கி நடந்தான் வினோத் .
காதில் வாக்மன் ,கையில் ஏதோ இங்கிலீஷ் நாவல் படித்தபடியே அமர்ந்து இருந்தான் ஹரிச்சந்திரன், வினோத்தின் அறை பங்காளி.
"ஹாய் ஐ அம் ஹரி , மெக்கானிகல் "என்று அறிமுக பேச்சு ஆரம்பம் ஆனது.. "வினோத் மதுர ECE" .யார் கேட்டாலும் ஊர் பெயரையும் சேர்த்து சொல்லும் பழக்கம் வினோத்திற்கு உண்டு .மதுரைக்காரன் என்று சொல்வதில் ஒரு தனி பெருமையாக கருதினான் .அறிமுக பேசேல்லாம் முடிந்த பின் ராகிங் ,ஹோம்சிக்நெஸ்,பிகர் இப்படி வெட்டியாக பேசியே இரவானது .
பேச்சு வாக்கில் "ஏன் டா நீ மெக்கு எடுத்த "என்று விவரம் தெரியாமல் கேட்டான் வினோத் " நம்ம காலேஜ்ல மெக்கு தான் டா weightu ,அசோக் லேய்லாண்டு , பேரக்ஸ் இந்தியா ஓட எல்லாம் tieup இருக்கு டா . கோர் கம்பெனி எல்லாம் காம்பஸ்ல வருவாங்க டா .. இப்படி மெக்கானிகல் துறையின் அருமை பெருமைகளை எல்லாம் அடுக்கி வைத்துக்கொண்டே " நீ ஏன்டா ECE எடுத்த" என்று வினோத்தை பார்த்து கேட்டான் ஹரி.
"அதுவா மச்சான், ECE எடுத்த சாப்ட்வேர் ,கோர் ரெண்டுமே போகலாம் டா , higher studies கூட நல்ல scope இருக்கு சொன்னாங்க அது தான்" .சரியா வாய குடுத்து மாட்னோம் ,councellingல அந்த பக்கம் உக்காந்தவன் இந்த பக்கம் உக்காந்தவன் ECE எடுத்த ஒரே காரணத்திற்காக நான் ECE எடுத்தேன்னு இவன் கிட்ட சொல்ல முடியாம ,கொலைகார பாவி மெக்கு சேர்றதுக்கு முன்னாடி பயங்கரமா விசாரிச்சிருக்கான்,நல்ல வேளை ஷண்முகநாதன் ஓட பேச்சு குடுத்தனால இவன் கிட்ட கண்டதையும் பேசி சமாளிச்சோம் டா சாமி " என்று மனதிற்குள் பெருமூச்சுவிட்டுகொண்டு ஹரியுடன் விடுதி உணவகத்துக்கு நடந்தான் வினோத்.
உணவருந்தி முடிந்தபின் ,
"ஏன் மச்சான் இவளோ சிக்கிரமா தூங்க போற" தன் அலாரத்தை சரி பார்த்து கொண்டிருந்த ஹரியை பார்த்து கேட்டான் வினோத். "டேய் இங்க காமன் பாத்ரூம் டா" காலையில சிக்கரம் எழுந்திரிச்ச தான் பாத்ரூம் கிடைக்கும்.
"ஒ அப்படிய சரி அப்ப என்னையும் எழுப்பி விட்டிரு மச்சான் குட் நைட் "என்று சொல்லி முடித்த பின் ,முதல் நாள் விடுதி இனிமையாக இருந்ததை எண்ணி நிம்மதியாக உறங்கினான் வினோத் .
மறுநாள் காலை , சுமார் எழு மணிக்கு மெல்ல தூக்கம் களைந்து எழுந்திரிந்த வினோத்திற்கு அதிர்ச்சி . குளித்து முடித்து ,புது துணி ,புத்தம் புது காலனி என்று புது மாப்பிள்ளை போல ஜோராக இருந்தான் ஹரி."உன்னை எத்தன வாட்டி டா எழுப்பி விட , சரி சிக்கிரம் ரெடி ஆகு " என்று கண்ணாடியில் தலைவாரி கொண்டே கூறினான் ஹரி. படுக்கையை விட்டு வெளிய வந்த வினோத்திற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. விடுதி வளாகமே விழாகோலம் புன்டிருக்க ,அங்கும் இங்கும் என ஆர்வமாக உலாவி கொண்டிருந்தனர் மாணவர்கள்.
" டேய் நேத்து நைட் யவனும் துங்கலிய டா ஏன்டா இப்படி ?" அதிர்ச்சியின் உச்சத்தில் வினோத் கேட்க "நான் பரவில பக்கத்து ரூம் ஷண்முகநாதன் காலேஜுக்கு கிளம்பி கால் மணி நேரம் ஆச்சு " என்று சொல்லி அறையை விட்டு கிளம்பினான் ஹரி .
கிட்ட தட்ட எல்லோருமே குளித்து முடித்துருக்க ,காலியாக இருந்த குளியலறையில் ஜாலியாக குளித்து முடித்து,முதல் நாள் கல்லூரிக்கு தயார் ஆனான் வினோத் .
(தொடரும்)
பஞ்ச் பரட்டை
௨
லாபம்
அருள்மிகு Commercial King பேரரசு துணை
அருள்மிகு கிங் காங் சீனியர் விஜய.T.ராஜேந்தர் துணை
இந்த பகுதியில அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்ஸ் எழுதலாம்னு இருக்கேன் .இத நான் ஏற்கனவே ஏதோ பேரரசு படத்துல கேட்ட மாறி இருக்கு நீங்க பீல் பண்ண நான் ஒன்னும் பண்ண முடியாது ...
களத்துல எறங்குடா பஞ்ச் பரட்டை ...
"காத்தயே கையில பிடிக்க முடியாது
நான் சூறாவளி டா "
சிம்பு ஸ்டைல் பஞ்ச்:
"ஒரு பொண்ணு பின்னால எத்தன நாள் சுற்றோம்கிறது முக்கியம் இல்ல
கடைசியா நீ அந்த பொண்ணு கூட ஒரு நாழவது சுத்துனியங்கிறது தான் முக்கியம் "
உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன் ...
Monday, July 13, 2009
PRELAB-VIVA-DEMO
a close observation of a typical engineering student
Wednesday, July 8, 2009
PRELAB-VIVA-DEMO
a close observation of a typical engineering student
பொதுவா எல்லோருக்கும் ரெண்டு விஷயம் மனதிற்கு ஆனந்தம் தரும் ...ஒன்னு பழைய நினைவுகள் ...இன்னொன்னு புதுசு புதுசா காணும் கனவுகள்...எனக்கும் அப்படி தான்...கனவுகளை கவிதைகளை ஆக்க முயற்சிப்பேன்...பழைய நினைவுகளை ஒரு கதையை மாற்றும் ஒரு முயற்சி தான் இந்தா Prelab Demo Viva..
(ஓவரா பேசாம சட்டு புட்டுனு மாட்டருக்கு வாட ..)
ஓகே ஓகே ...
இந்தா கதையின் நாயகனின் பெயர் வினோத் குமார் ...சாஸ்திர பல்கலைக்கழகத்தின் படித்த மாணவன் ...19 ஜூன் 2005 முதல் 19 மே 2008 வரை அவன் மற்றும் அவனை சுற்றி நடந்த நிகழ்வுகளை மையமாக கொண்ட கதை தான் இது ...
ஆட்டோகிராப் முதல் ஹாப்பி டேய் வரை இதே கதை தானே இதுல என்னை புதுசா இருக்குன்னு நீங்க கேக்கலாம் ..
ஆமாம் இதுவும் அதே கதை தான் ..
ஆனால் இது என் கல்லூரி ,என் நன்பர்களை பற்றியது அதுனால் இதுவும் அழகா தான் இருக்கும்..
சரி கதைக்கு போவோம் :)
Saturday, July 4, 2009
கமிட் ஆயாச்சு...
இது வரைக்கும் இந்த bloga யாருமே சீண்டல...இதுக்கு மேலையும் பொறுக்க முடியாது...ஏதாவது பண்ணியே ஆகணும் so இனிமே கவிதை மட்டுமில்லை கையில்லா வர்ற எல்லாம் எழுத போறேன்....
கதை, சினிமா விமர்சனம்,இசை விமர்சனம் இப்படி நிறைய எழுதலாம் இருக்கேன்...தயவு செஞ்சு இந்த மாதிரி தப்பான முடிவிக்கு வந்துறாதன்னு நீங்க சொன்னாலும் கேக்க போறதில்ல ...
ஏன்ன நான் ஒரு தடவ கமிட் ஆயிட்ட என் பேச்ச நானே கேக்க மாட்டேன் ...(no bad words please )
இதுக்கு மேலயும் நீங்க படிக்கலைனா ...கீழயாவது படிங்க ...ஆனா படிங்க...
Wednesday, April 22, 2009
மழை
காகித கப்பலை குழந்தைகள் வடிவமைக்கும் காலம்
மழையுடன் தவறாமல் வரும் ஒன்று ,மண் வாசம்
என் ஊரில் நீ பிறந்து இருந்தால் மழையுடன் தவறாமல் வரும்
நீண்ட நேர மின் விட்டும் ,மெழுகுவர்த்தியுடன் விளையாட்டும் :)
அடை மழையாக கொட்டினாலும் சரி
சிறு துளிகளாக சொட்டினாலும் சரி
மழை என்றாலே மனதிற்கு ஒரு வித ஆனந்தமே :)
Saturday, April 11, 2009
சந்தோஷ கண்ணிரே ...
மறுகையை உன் காதில் வைத்து பார்
உன் கண்ணில் நீர் வந்தால்
தாங்கி பிடிப்பேன்
உன் கண்ணிரையும்
நம் காதலையும்
Thursday, March 26, 2009
உன்னை பார்த்த பின்பு நான் :)
உறங்கும் போதும் கூட உளர்கிறேன் ...
உன்னை பார்த்தால் மட்டும் ஊமை ஆகிறேன்...
உன் ஒவ்வொரு கண் சிமிதளுகும்
என் நெஞ்சில் ஒரு பூ பூக்கிறது...
விண்ணை தாண்டி பறக்கிறேன்..
என்னை ஆறியாமல் சிரிக்கிறேன்..
உண்மை காதலை உணர்கிறேன்..
உன்னை பார்த்த பின்பு தான்..:)
Tuesday, March 24, 2009
என்ன செய்ய ???
இதழ்கள் பிரியும் போது தான் வார்த்தை பிறக்கிறது ....
இதயம் பிரியும் போது தான் காதல் பிறந்தது .....
என்ன செய்ய இப்போதெல்லாம் ,
விழி திறந்து கூட தூங்க முடிகிறது
ஆனால் உன் பிரிவை தாங்க முடியவில்லையே!!!
Tuesday, March 10, 2009
ECSTASY...
புரியாத மொழியிலும் புலவனாக துடிக்கிறேன்...
போதையில் பாதை விளங்கவில்லை ...
ஆனாலும் பயணம் இனிமையாக இருக்கிறது.....