அன்று ,என் வயது 12.
அடுத்த வாரம் வரும் தீபாவளிக்காக ,
தேடி பிடித்து வாங்கினேன் வித விதமான பட்டாசுக்களை .
வாரம் முழுவதும் கனவுகள் ,
கனவுகள் முழுவதும் பட்டாசுகள் .
தீபாவளியும் வந்தது ....."மழையோடு" ,
வானை பார்த்தே நான் சொன்னேன்
" நீ அழும் வரை , நானும் அழுவேன் என்று"
அன்றைய தினம்,
தீபாவளி பலகாரம் அன்று எனக்கு இனிக்கவில்லை .
புது துணி மீதும் எனக்கு விருப்பம் இல்லை .
அது ஏனோ தெரியவில்லை ,
பக்கத்து ஊரில் என் நண்பன் ,
வைத்த வெடியை கூட ரசிக்கும் பக்குவம் எனக்கு இல்லை .
இந்த ஈரமான மண்ணும் ,ஈரமான கண்ணும் காய்வது எப்போது?
என் மனதின் காயங்கள் மறையும் அப்போது.
இன்று, என் வயது 22.
அன்றைய தீபாவளி போல ,
இன்றைய வாழ்கைக்காக தேடி பிடித்தேன் ஒரு வேலையை.
அன்றைய பட்டாசு கனவுகளை போல,
வேலைக்கு செல்கிறேன் கனவில் மட்டும் .
மழை நிற்க விண்ணை பார்த்தேன் அன்று,
கால் லெட்டர்காக கணிணியை பார்க்கிறேன் இன்று .
அன்றைய பக்கத்து ஊர் நண்பனை போல,
இன்றைய வேலைக்கு செல்லும் நண்பர்கள்.
இது கதையா கவிதையோ என்று எனக்கு தெரியது ?
ஆனால் ஒன்று மட்டும் உண்மை ,
இந்த கதையின் விதையும் ,இந்த கவிதையின் கதையும்
தீரும் நாளே எனக்கு தீபாவளி.
No comments:
Post a Comment